Sunday, January 16, 2011

பரிகாரம் செய்தவுடன் பலன் கிடைக்க....! 1












இதோ மிகச் சிறந்த எளிய பரிகாரங்கள் ......

          மனிதர்களுக்கு  ஏற்படும்  கஷ்டங்களுக்கு கர்மவினையே 
காரணம்  என நம் மதம் கூறுகிறது.இதனால்  பரிகாரத்தினால் 
மட்டுமே எதிர் மறையான பலன்களை குறைக்க முடியும் 
என்று மக்கள் ஆயிர கணக்கில் பணத்தை செலவு செய்து 
அதில் நிம்மதியை தேடுகிறார்கள்.
ஒரு சிலர்போலி சாமியார்களிடம் சென்று ஏமாறுகின்றனர். 
ஒரு சிலர் போலி ஜோதிடர்களிடம்  சென்று ஏமாறுகின்றனர். 
     பரிகாரம் என்றால் பொதுவாக ஞாபகத்திற்கு வருவது 
கோயில்களுக்குச் செல்வது,அர்ச்சனை செய்வது மற்றும் 
அபிஷேக ஆராதனைகள் தான்.
        எனது நட்சத்திரம் திருவோணம்,எனது மனைவி 
நட்சத்திரம் கன்னி.நாங்கள்  செய்து பார்த்து உணர்ந்து 
முழுமையாக  பலன் அடைந்த பிறகே இதை உங்களின் 
பார்வைக்காக  இங்கே தரப் படுகிறது. 
      இந்தப்  பரிகாரத்தின்படி  நாம்  புற்றுக்கள் உள்ள 
ஆலயங்களுக்குச் சென்று  நம்மால் முடிந்த அளவு
தீபமேற்றிஇதில் இருக்கும் எளிய மந்த்ரத்தை உளமார
சொல்லி புற்றுக்கு பால் ஊற்ற வேண்டும். 
          முதலில் வினைகளைப் போக்கும்  விநாயகருக்கு 
வணக்கம் செலுத்துங்கள்.
       இனி  நட்சத்திரங்களின் வரிசைப்படி ........

1.அஸ்வினி 
     மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  சரஸ்வதி.
சரஸ்வதி காயத்ரி சொல்லலாம். 
     புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  சர்ப்பரிகன்யாய  நமக "
          நாம் இருக்கும் திசைக்கு கிழக்கு திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு புதன்கிழமை  தோறும்  
7 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும். 
             இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக  மாங்கல்ய தோஷம்  நிவர்த்தியாகும்.
2.பரணி 
     மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  துர்கா.
 துர்கை காயத்ரி சொல்லலாம்.   
      புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய
 மந்த்ரம்  " ஓம் வாசுகியை நமக "
நாம் இருக்கும் திசைக்கு மேற்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு  வெள்ளிகிழமை தோறும்
 6 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும். 
          இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக பெண்களுக்கு மாதவிடாய்  
கோளாறுகள் தீரும், ஆண்களுக்கு ரத்த சம்பந்தமான 
நோய்கள்  தீரும் .
3.கிருத்திகை 
      மனதில் வணங்க வேண்டிய  கடவுள் (அக்னி)
சூரியன். சூரிய காயத்ரி சொல்லலாம்.  
           புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  தட்சகன்யாய நமக "
    நாம் இருக்கும் திசைக்கு தெற்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு  ஞாயிற்றுக்கிழமை 
தோறும் 10 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
 இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக பெண்களுக்கு தடைபட்ட மாதவிடாய்,
கர்ப்பப்பை கோளாறுகள் தீரும்.வியாதிகள்  தோன்றாமல் 
தடுக்கும்.
4 .ரோகினி
         மனதில் வணங்க வேண்டிய  கடவுள் பிரம்மா.
பிரம்மாவின் காயத்ரி சொல்லலாம்.
       புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் சங்கபாலன்யாய நமக "
           நாம் இருக்கும் திசைக்கு வடக்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   திங்கட்கிழமை 
தோறும் 2 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக கணவன் மனைவிக்கு இடையே 
உள்ள பிரச்சினை தீரும்.பகையாளிகள் நண்பர்களாக
மாறுவார்கள்.
5.மிருகசீரிஷம் 
        மனதில் வணங்க வேண்டிய  கடவுள் சந்திரன்.
  சந்த்ரனுடைய   காயத்ரி சொல்லலாம். 
 புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய
 மந்த்ரம் " ஓம் மதிமதனாய நமக "
   நாம் இருக்கும் திசைக்கு தென்கிழக்கு   திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   திங்கட்கிழமை 
தோறும் 2 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக கணவனால் மனைவிக்கு ஏற்படும் 
துன்பம் நீங்கும்.மனைவியால் கணவனுக்கு ஏற்படும் 
துன்பம் நீங்கும்.
6 .திருவாதிரை  
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் ருத்ரன்.
சிவ காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் கார்கோடகன்யாய நமக "
   நாம் இருக்கும் திசைக்கு வடகிழக்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   சனிக்கிழமை அல்லது 
செவ்வாய்க்கிழமை  தோறும் 4  வாரங்கள் தொடர்ந்து  
பால் ஊற்ற வேண்டும்.இதனால் ஏற்படும் பலன் எல்லா 
பிரச்சினைகளும்  தீரும், முக்கியமாக குழந்தைகள் மற்றும் 
பிள்ளைகள் நோய் தீரும்.
7 . புனர்பூசம்
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் தேவர்கள் ( குரு).
 குரு காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் தனஞ்ஜயன்யாய நமக "
  நாம் இருக்கும் திசைக்கு வடமேற்கு   திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   வியாழக்கிழமை  
தோறும் 3   வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும்  தீரும்,
முக்கியமாக பிள்ளைகளின்  கடமைகள் மற்றும் தடைபட்ட 
காரியங்கள்  நிறைவேறும்.
8 . பூசம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  வியாழன் (குரு).
குரு காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் குளிகன்யாய நமக "
   எந்த கோயிலிலும் உள்ள அரச மரத்தடி புற்றுக்கு 
வியாழக்கிழமை  தோறும் 3   வாரங்களும் பின் 
திங்கட்கிழமை தோறும்  2  வாரங்களும்  தொடர்ந்து  
பால் ஊற்ற வேண்டும். இதனால் ஏற்படும் பலன் 
எல்லா பிரச்சினைகளும்  தீரும்,முக்கியமாக பங்காளிப் 
பிரச்சினைகளில் ஆண், பெண் இருவரால் ஏற்படும் 
சண்டைகள் தீரும்.
9.ஆயில்யம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் ஆதிஷேசன் 
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் ஆதிஷேசன்யாய நமக "
எந்த கோயிலிலும் உள்ள அரச மரத்தடி புற்றுக்கு 
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை  தோறும் 
6  வாரங்களும்  தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும். 
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும்,முக்கியமாக கூட்டுத்தொழில் சிறக்கும்.
தொழிலில் ஏற்படும் பிரச்சினை தீரும்.உத்தியோக 
உயர்வு கிட்டும். பங்காளி சண்டை தீரும்.

                              ..... 2 ல் தொடரும்   

No comments:

Post a Comment