Sunday, December 19, 2010

வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?.....














உங்களுகென்று  உள்ள  கருத்துக்களைக்
கொண்டுமற்றவர்களை  மதிப்பிட்டு விடாதீர்கள் .

வெளித் தோற்றத்தை  வைத்து யாரையும்  மதிப்பீடு
செய்ய  வேண்டாம் , பழகிப்  பார்த்து முடிவு  செய்யவும்.

பிறர்  கூறுவதை  உன்னிப்பாக  கவனிக்கவும் .

எல்லோருக்கும்  தலைக்கனம்  உண்டு. அதற்காக பிறரை 
துச்சமென  மதிக்க வேண்டாம், வெறுக்கவும் வேண்டாம்.
குறைவாகப் பேசுங்கள், அதன் மூலம் நிறைய கற்றுக் 
கொள்வீர்கள். 

பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதே போல 
உங்களுடைய  நேரத்தையும்  பிறர் வீணாக்க  ஒரு
போதும் அனுமதிக்காதீர்கள். 

ஒருவருக்கு  உதவி  செய்ய நினைத்தால்  அவர் பற்றிய 
முழு விபரமும்  அறிந்து, பின் உதவி செய்யுங்கள். 

நீங்கள்  மேலதிகாரியாக இருந்தால்  உங்களின்  கீழ் 
பணி புரிபவர்களிடம், முடிவு செய்தல் , செய்த முடிவை 
மாற்றுதல், வேலையை  முடித்தல்  இவற்றில்  முழு 
சுதந்திரம்  கொடுங்கள். 

எல்லா குழந்தைகள்  மீதும்  அன்பு செலுத்துங்கள். இதன் 
மூலம் குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் 
நன்மதிப்பு பெற முடியும். 

ஒருவரை  பாராட்டும் போது  முழு மனதுடன்
பாராட்டுங்கள். போலியான  பாராட்டு  எப்போதுமே
நன்மை தருவதில்லை. 

தவறுகள்  மனிதர்களிடம்  இயல்பு. அதனை
அனுமதிப்பதில் தவறு இல்லை. மீண்டும்   'அப்படி' 
நடக்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொள்ளுங்கள். 

உங்களை சுற்றிஇருப்பவர்களே  உங்கள்  கூட்டாளிகள்
மற்றும் நண்பர்கள். உங்களின்  உலகமே  அவர்களாக
இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும்  ஒரே
நேரத்தில்  பகைத்துக் கொள்ள  வேண்டாம். 

உங்களுக்கு  ஒன்றைப் பற்றி  தெரியாவிட்டால்
உண்மையை சொல்லி விடுங்கள். தெரியும்
என்று நடிக்காதீர்கள். 

தவறு செய்தால்  அதைஒப்புக் கொள்ள  தயங்காதீர்கள்..!
அப்படி ஒப்புக் கொண்டால் மற்றவர்களுக்கு உங்களை 
பிடித்துப் போகும். 

வெற்றிபெற்றால்  எல்லோருடனும்  சேர்ந்துதான்  இந்த 
வெற்றி  என்று அனைவருடனும்  பகிர்ந்து  கொள்ளுங்கள்.

Tuesday, December 14, 2010

மனம் அமைதியாக இருக்க வேண்டுமா? ....II



தான்  வாழும்  வாழ்வில்  எதிர்பார்ப்பு  இல்லாதவனே 
நல்ல மனோபாவம்  கொண்ட மனிதன் 

        இன்று பலரது வாழ்க்கையில்  அவர்கள்  
அனுபவிக்கும்  துன்பத்திற்குக் காரணம்  எதிர்பார்ப்பு.
       பெற்றோர் பிள்ளைகளிடமும் ,முதலாளி  
தொழிலாளியிடமும், தொழிலாளி முதலளியிடமும் 
பக்தன் கடவுளிடமும்  ஏதோ ஒன்றை எதிர் பார்த்தே 
(கடவுள் தவிர) ஒருவருக்கொருவர்  நட்பு  அல்லது உறவு
கொள்கின்றனர். ஆனால் அது நிறைவேறாத
நிலையில்  அவர்களின் எதிர்பார்ப்பு  நிகழாத  நிலையில் 
மனது மற்றவர்களிடம்  வெறுப்புக்  கொள்கிறது. 
        நாம் ஒன்றின் மீது  அளவு கடந்த  அன்பு 
வைத்திருந்தால்அதை சுதந்திரமாக  விட்டுவிட
வேண்டும்.அது நம்முடையாதாக இருந்தால் ,நம்மைத்
தேடி அது மீண்டும் வரும்இல்லையேல் அது வராது.
        பெற்றோர் பிள்ளை உறவாக இருந்தாலும் சரி,
கணவன்மனைவி  உறவாக இருந்த்னாலும் சரி 
அல்லது மற்ற உறவுகளாக இருந்தாலும் சரி  மேலே 
சொன்ன உணர்வில் நாம் எல்லோருடனும் வாழக் 
கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை என்றுமே
இனிமைதான். 

சுய அறிவைப் பயன் படுத்துங்கள்  

இன்றைக்கு  நமது மனம் சொல்வதையே அறிவு
கேட்டுக் கொண்டிருக்கிறது .ஆனால், எப்போதுமே
நம் அறிவு சொல்வதை மனம் கேட்க பழக்க வேண்டும். 
     மனம் ஒரு குதிரையாக இருக்க வேண்டும் ,அறிவு 
அதில் ஏறி  சவாரி  செய்ய  வேண்டும் . இதுதான் சுகமான
வாழ்க்கையாக இருக்கும் .ஆனால் இன்றைக்கு அறிவு 
குதிரையாக இருக்கிறது .மனம் அதி ஏறி இலக்கில்லாமல் 
சவாரி செய்து கொண்டிருக்கிறது. 
       மனம் சொல்வதை கவனியுங்கள், சுய அறிவால் 
அலசுங்கள், பின்பு  செயலில்  இறங்குங்கள் . இப்படிச்
செய்தால் மனதைப் போட்டு குழப்ப வேண்டிய 
அவசியமே இல்லை. சரியான தீர்வு மனதில் 
தானாகவே  உதிக்கும். 

நான்தான் (என்னால்தான்) எல்லாம்  என்கிற
உணர்வை விரட்டுங்கள்

         இயல்பாகவே நம்மில் பலர்  வாழ்க்கை இன்பமாக 
இருந்தால்  அதற்கு  காரணம்  தான்தான்  என்றும் 
தன்னால்தான்  அது  நடந்தது   என்றும்  நெஞ்சை 
நிமிர்த்திக் கூறுவர். 
       ஆனால் அவர்கள் வாழ்வில்  எதாவது துன்பம் 
நேர்ந்தால் அதிலிருந்து (அப்பொறுப்பிலிருந்து) 
தன்னை எப்படியாவது விடுவித்துக் கொண்டு 
பழியை மற்றவர் மீதோ அல்லது நேரம்  என்று 
தலைவிதி   மீதோ போட்டு விடுவார்கள்.
           அதிமேதாவியகவோ, புத்திசாலியாகவோ 
ஒரு போதும் உங்களை  நீங்களே நினைத்து   
கர்வம் கொள்ள  வேண்டாம்.
           ஒருவன் சாஸ்திரங்களை  முழுமையாக 
கற்ற  பிறகும் கூட முட்டாளாக இருக்கக் கூடும் 
என்கிறது  பஞ்ச தந்திரம்.
         அறிவாளியாக இருப்பது வேறு ,
புத்திசாலியாக இருப்பது  வேறு - சற்று ஆழ்ந்து  
யோசியுங்கள், புத்திசாலிகளாக  நாம் இருந்தால் 
இதைப்  போன்ற அறிவுரைகள் பெரியோர்கள் 
மூலம் நாம் பண்பட  கிடைத்திருக்காது.
      மனதில்  தோன்றும்  கற்பனையான  பிரச்சினையில் 
மூழ்கி அநாவசியமாக  டென்சன்  ஆகாமல் இருக்க நாம் 
பழகிக் கொண்டால்  அது நம் மனத்திற்கு இதம் தரும்
விஷயமாக மாறும்.நாம்  நம்மையே ரிலாக்ஸ்  
செய்து கொள்ள உதவும்.  

பரந்த மனப்பான்மை  நம்மை மேம்படுத்தும் 

        நமக்கு  கீழ்நிலையில்  உள்ளவர்களிடமிருந்து  
வரும்  நல்ல ஆலோசனைகளை - நமக்கு  அது  சரி 
என்றே தோன்றினாலும் -ஏற்றுக் கொள்ள 
மறுக்கின்றோம்.
      ஒரு பெரிய பிரச்சினைக்கு  ஒரு சிறுவனிடமிருந்து 
கூட நமக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம். தெருவில் 
நம்மை கடந்து செல்லும் மூன்றாம் மனிதரிடம் கூட 
நல்ல பதில் கிடைக்கலாம். 
       பரந்த மனப்பான்மையுடன்  மற்றவர்களது  
கருத்துக்களை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்வோம். 
இதன் மூலம் நமக்கு நம் மனதில்  புதிய கருத்துச்
சிந்தனைகளுக்கான  களம் பிறக்கும். 

மனதை அமைதிபடுத்த தியானம்  பழகுவோம் 

     இந்த உலகம்  எப்போதுமே  எளிமையானதுதான்
சிக்கல் ஆரம்பிப்பது   நம்மிடமிருந்துதான். நாம்  
எப்போதுமே  நாமாகவே இருக்க இயல்பாகப் பழகிக் 
கொள்ள வேண்டும். அதாவது ,மனிதன் 
மனிதனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி? 

     நாம் நமக்குள்ளேயே  அமைதியாக இருந்து பழக
வேண்டும். அப்படி பழகினால்,  நாம் நம்மையே  
அறிய முடியலாம், நம் மனத்தை  அறியவும்  அமைதி 
படுத்தவும் முடியலாம். இதற்கு சிலவகையான 
தியானப் பயிற்சிகள்  உதவும். 
        நமது வாழ்விற்கு பயன்படாத  எந்த ஒரு ஆன்மீக 
உபதேசமும் நம்மை கண்டிப்பாக மேம்படுத்த முடியாது.
      தெய்வ வணக்கம்  நம் மனதை மரத்து போக செய்யும்.
உடம்பு வலிக்கும், ஆனால் வலிக்காதது போல்  
தோன்றும். நோய் இருக்கும், ஆனால் ஆரோக்யமாக 
நடமாடச்  சொல்லும். கஷ்டங்கள் இருக்கும் , 
அனால் மனதில் கவலைகள் தோன்றாது. 
எது நடந்தாலும்  அது நடக்கத்தான் செய்யும்  என்ற 
அலட்சிய மனோபாவத்தை உண்டாக்கும்.
         கவலையோ, பயத்தையோ  பொருட்படுத்தாத 
ஒரு நிலையை  தெய்வபக்தி  உண்டாக்குகிறது. 
மனப்பூர்வமாக  ஈடுபாட்டோடு  தெய்வத்தை 
வணங்க வேண்டும். 
           முட்டாள் புததிசாலியானால்  ஞானத்திற்கு 
வருகிறான்.புத்திசாலி முட்டாளுகும் போது 
காமத்திற்கும் ,போதைக்கும் இன்னும் பல 
எதிர்மறையான  செயல்களை  செய்வதற்கும் 
ஆரம்பிக்கிறான்.
         நாம் அடையும் மகிழ்ச்சியும் உண்மையானதல்ல ,
நாம் அடையும் துன்பமும்  உண்மையானதல்ல .மனமே 
இரண்டையும்  வேறு படுத்துகிறது. 

 மனதிற்கு மருந்து  பணமா அல்லது 
தூய்மையான  அன்பா?

    பணம் என்பது  நாம் வழங்கும் சேவை, செய்யும்
வேலைக்கான வெகுமதி மட்டுமே.
        நல்ல மனோபாவம்  கொண்டவர்கள்  மனிதர்கள்  
மீது அன்பு செலுத்தி  பணத்தை ஒரு கருவியாக 
மட்டும் செயல் படுத்துவார்கள்.ஆனால் இன்று 
பணத்தின் மீது தான் அன்பு செலுத்தப்படுகிறது.
        பணம்தான் முதன்மையானது  என்ற எண்ணத்தை 
மனதில் ஏற்றிவிட்டால் உறவுகளும் நட்பும் இனிக்காது. 
        உறவுகளும் நட்பும்  முதன்மை  பெற்றால் பணம் 
நமது அடிமை .ஆனாலும் உறவுகளும்  தூய  மனத்தால்
நம்மை நேசிக்க வேண்டும்.வேஷங்கள் என்றுமே
நிலைப்பதில்லை.
       தூய அன்பு என்பது  நாமும் நன்றாக இருக்க
வேண்டும் , மற்றவர்களும்  நன்றாக இருக்க 
வேண்டும்  என்ற உணர்வுதான்.
       நல்ல மனோபாவம்  கொண்ட மனிதனின்  வாழ்க்கை
  இன்பம்  நிறைந்த  பூஞ்சோலை.நம் வாழ்க்கையில்
நம்மை நாடி வரக்கூடிய துன்பங்களை , நாம் ஒரு சிறந்த 
அனுபவமாக  ஏற்றுக்கொண்டால்
நம்மால் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.
         அன்பின்  வாசத்தை  உணராத மனிதர்கள் 
இருந்தும் என்ன பயன்?... 

நிறைவாக....

இந்த  உலகில் நம்மைத் தாக்குவது இரண்டு 
வகையான  சோகங்கள் 
1 . நாம் ஆசைப்பட்டது கிடைக்காத  போது ,
2 . நான் ஆசைப்பட்டது  கிடைத்து  அதைக்
காப்பாற்றிக் கொள்ள பாடுபடும் போது . 
         ஆசைப் படாமல் எதையும் பெற முடியாது .
ஆனால்  ஆசையே அளவிற்கு  அதிகமானால்  
துன்பமே மிஞ்சும்.
          எப்போதுமே நாம் நம் தேவையை அதிகரித்துக் 
  கொண்டு  பிச்சைக்காரனைப் போல் பணத்திற்கு  
அலைவதை விட , நம்முடைய  தேவைகளை குறைத்து 
கொண்டு  நம்மால்  அரசனை விட  சுகமாக  வாழ முடியும். 
      முயற்சி  செய்து பார்ப்போமே ...!
வாழ்க்கையில்  உணர்சிகளுக்கு  இடம்  கொடுக்கும் போது 
சற்றே நிதானித்து  அறிவையும்  பயன் படுத்துவோம்.
       மனங்களைப் புரிந்து கொள்ளுங்கள் .புரியாமல் நாம
என்ன சொன்னாலும்  சொல்வது ஒன்று செய்வது 
ஒன்றாகவே  இருக்கும்.
       துன்பம் நமக்கு சுமையல்ல .மனதில் இருப்பதை
  நல்ல உறவுகளிடமும்  ,நல்ல நண்பர்களிடமும்  
பகிர்ந்து கொள்ளுங்கள்.அடுத்தவர்களிடம்  பகிர்ந்து
கொள்ளும் போது துன்பம் தொலைந்து போகிறது 
இன்பம்  இரட்டிப்பாகிறது. 
       

           ( என்னைத்  கொஞ்சம் கொஞ்சமாக  
தெளிவு படுத்தும் சுவாமி விவேகானந்தர்
கவியரசு  கண்ணதாசன் மற்றும்  தென்கச்சி
சாமிநாதன்  ஆகியோரது  எழுத்துக்களிலிருந்து )


Sunday, November 28, 2010

LIFE IS A GAME, THESE ARE THE RULES.


 IF LIFE IS A GAME, 
THESE ARE THE RULES.

  Author: Dr.Chérie Carter-Scott, Ph.D


 












I found this ten rules to be most 
thought-provoking and I think this will 
be helpful to all.

Rule One:
You will receive a body. You may love it or 

hate it, but it will be yours for the duration
of your life on Earth.

Rule Two:
You will be presented with lessons.
You are enrolled in a full-time informal school 

called "life."Each day in this school you will have 
the opportunity tolearn lessons. You may like
the lessons or hate them, butyou have designed 
them as part of your curriculum.

Rule Three:
There are no mistakes, only lessons.
Growth is a process of experimentation, a 

series of trials, errors,and occasional 
victories. The failedexperiments areas much
a part of the process as the experiments 
that work.

Rule Four:
A lesson is repeated until learned.
Lessons will repeated to you in various forms 

until you havelearned them. When you have 
learned them, you can then go on to the 
next lesson.

Rule Five:
Learning does not end.
There is no part of life that does not contain

lessons. If you are alive, there are lessons 
to be learned.


Rule Six:
"There" is no better than "here."
When your "there" has become a "here," you 

will simply obtaina "there" that will look better 
to you than your present "here."

Rule Seven:
Others are only mirrors of you.
You cannot love or hate something about 

anotherperson unless it reflects something you
love or hate about yourself.

Rule Eight:
What you make of your life is up to you.
You have all the tools and resources you need.
What you do with them is up to you.

Rule Nine:
Your answers lie inside of you.
All you need to do is look, listen, and trust.

Rule Ten:
You will forget all of this at birth.
We are all born with all of these capabilities - 
our early experiences lead us into a physical 
world, away from our spiritual selves, so that 
we become doubtful, cynical and lacking 
belief and confidence.

The ten Rules are not commandments, they are 
universal truths that apply to all. When you lose
your way, call upon them. Have faith in the 
strength of your spirit.Courage resides in all 
of us - use it when you need to do what's right 
for you. Trust your instincts and your innermost
feelings, whether you hear them as a little voice 
or a flash of inspiration. Listen to feelings 
as well as sounds. Look, listen, andtrust. 
Draw on your natural inspiration.

Aspire to be wise - wisdom the ultimate path of
your life, and it knows no limits other than those 
you impose on yourself. Support others, and by 
doingso you support yourself. Where you are 
unable to support others it is a sign that you are
not adequately attending to your own needs. 
 If you are interested in making the most
of your life, and helping others forward 
this to all your friends.
                                                               
                                                                                  From Net

Tuesday, November 16, 2010

மனதை சுத்தம் செய்ய.....




ஆசை உலகிற்கு பயன்படட்டும்

* மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே 
அடிப்படையாகஇருக்கிறது. ஆசையினால் ஒன்றை 
அடைய விரும்புகிறோம்.அதனை அடைவதற்காக
சிலர்தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம 
வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது 
ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற 
உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, 
ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

* அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் 
பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து 
விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை 
நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற
வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது.
நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள்
வந்து கொண்டேதான்இருக்கும். ஆசையில் இருந்து 
விடுபட மனதைஇறைவனிடம் வைக்க வேண்டும்.

* ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில்
ஈடுபடுத்தும்சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும்
ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர
குறைவதில்லை.இதனால் இன்பத்தை காட்டிலும், 
துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு 
தடுப்பு போட வேண்டியது அவசியம்.

* ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், 
உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும்
மாற்றிக்கொள்ளுங்கள்.இத்தகைய ஆசையில் ஈடுபாடு 
காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் 
செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் 
எல்லாம்உங்களை விட்டு விலகிவிடும்


* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி
தான் உண்டு.எப்படிச் சுற்றினோமோ அப்படியே 
மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். 
அதைப் போலவே தவறான செயல்களை 
நற்செயல்களினாலும், பாவங்களைப் 
புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.

* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந் 
நாமாக்களை(தெய்வப் பெயர்கள்) உச்சரித்தல்,
கோவில்களைத் தரிசித்தல் ஆகிய நல்ல செயல்கள்
எல்லாம், பாவம் தொலைக்கும் வழிகளாகும்.

* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும்,
கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்தந்த 
உறுப்புக்களினாலும்மட்டுமே தீர்க்க முடியும்.

* வெளியில் இருந்து வரும் பொருள்களில் 
மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் 
சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். 
வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில்
இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் 
போகும்.தனக்குள்ளே ஆனந்தம் இருப்பதை
மனிதன் மறந்து விடுகிறான்.

* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம்
போன்றது. பதவி, பணம், பெயர், புகழ் என்று
வெளியில்நாம் எதிர்பார்க்கும் எல்லாமே சொட்டுத்
தண்ணீருக்குசமமானது. இதை முற்றிலும்
உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் 
தேடி அலைவதில்லை.


மனதை சுத்தம் செய்     

செம்பைத் தேய்த்து வெளுப்பாக்கிவிட்டால் 
மறுநாளும் அழுக்காகத்தானேசெய்கிறது. மறுபடி 
தேய்க்க வேண்டும். இதேபோல் நாம் சித்தத்தையும்
விடாமல் அனுஷ்டானத்தால் சுத்தம் செய்துகொண்டு
இருக்க வேண்டும்.

பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் 
சர்வ சக்தனாகவும் இருந்துகொண்டு நம் 
கர்மங்களுக்குப் பலன் தருகிறான் என்ற பய 
உணர்ச்சிதான், யுக யுகாந்திரமாக மனிதனைத்
தர்ம மார்க்கத்தில் நிறுவும் ஊன்றுகோலாக 
இருந்து வந்திருக்கிறது.

தேவர்களுக்கு நம்மைப் போல் மூப்பு மரணம்
இல்லை. அவர்களுக்குநம்மைவிட சக்தி அதிகம். 
இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே
ஆகுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.














யாராயினும் ஆசை வேண்டாம் 

* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் 
அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் 
கொள்வதற்கு முன்னால்ஒழுக்கம் அவசியம்.
இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி 
கெட்டதை வளர்க்கும்.

* குறைச்சலான வசதியைக் கூடப் பெற 
முடியாதவர்களுக்கு உதவுவதுதான் தியாகம், 
தர்மம், புண்ணியம்.

* அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு 
செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மை
விட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் 
கொண்டிருக்க வேண்டும்.

* பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை
வஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது. 
இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது.

* ரதி சுகம் தர்ம பத்தினியுடன் 
அனுபவிக்கலாமாயினும்நிஷேத தினங்களில்
(சாஸ்திரங்களில் விலக்கப்பட்டநாட்களில்)
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
பிற பெண்களைமனதாலும் நினைக்கக்கூடாது.

* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், 
மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின்
பாவம் குருவையும் சேரும்.

* யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் 
கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம 
சம்பத்தும் உண்டாகாது.

* தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் 
செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் 
கிடைக்கலாம். ஆனால்உள்ளத்துக்கு நிறைவான 
ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.

* இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச்
செய்யாதநிலைத்த பேரின்பமே 'மோட்சம்'.

* தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே 
கட்டும்செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் 
புருஷனுக்கு கவுரவம்


எளிய வாழ்க்கை வாழுங்கள்

நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்கள்
வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான 
எண்ணம். அதே நேரம், ஆசையை வளர்த்துக் 
கொண்டே போனால்ஆத்ம அபிவிருத்தி என்பதே 
இல்லாமல் போய்விடும்.

சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை 
தொலைப்பதற்கான வழி.எவ்வளவு எளிமையாக 
வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு 
எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் 
கொள்ளும் விஷயம்.வயிற்றுக்கு உணவு, மானத்தை 
மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு

இம்மாதிரியான அடிப்படையான 
தேவைகளை எல்லோரும் பெறவேண்டும்.

இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு 
மேல் தேவைஎன்று பறக்க வேண்டியதில்லை. நாம் 
எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே 
உலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம்.
கிணற்றில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும்
போது கனம் தெரிவதில்லை.ஆனால், தண்ணீர்
மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் 
கனத்தை நம்மால் உணரமுடிகிறது.

எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை
தண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல, 
நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம்
என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும்.

 அப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் 
தாக்கம் மனதைத் தொடுவதே இல்லை. 
நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது 
துன்பம் பரமலேசாகி விடும்.
 
                       -மகாப் பெரியவா...


அய்யா  நாயேனையும் நல்வழிப் படுத்தி 
அருள் புரியுங்கள் .உங்கள்  திருவடி சரணம் ...
உங்களை உணர  அருள் புரியுங்கள் .

Wednesday, October 20, 2010

Get Ready For Success











No one  will   manufacture a lock  without a key ,similarly
God won't give problems without solutions.

If you miss an opportunity  don't fill the eyes with tears,
It will hide another better opportunity in front of you.


"Changing the face" can  change nothing. But,
"Facing the change" can  change everything.


Don't complain about others, change yourself ,
If you want peace.

Mistakes are painful when they happen, But years later 
collection of mistakes is called  Experience, which leads to Success.

Every successful person has a painful  story,
Every  painful story has a successful  ending.

So, accept the pain and    Get   Ready   For   Success



Thursday, October 7, 2010

நவராத்திரி சக்தி வழிபாட்டின் தத்துவம்


    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது
என்பதுதான் அர்த்தம்.உலகம்அனைத்தும் சக்தி மயம் 
என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா
இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் 
குறிக்கும் விதமாகவே அனைத்துஉருவ 
பொம்மைகளையும் கொலுவாகவைத்து 
வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

    நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி 

சக்தியாகவிளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று
ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய 
ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராகமாறுகிறாள் 
என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.
    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி 

தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, 
போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

    மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா 
தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் 
மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என 
லட்சுமி தேவியாகவும், நிறைவுறும் மூன்று 
தினங்களில் சரஸ்வதி,நரசிம்மீ, சாமுண்டி
என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து 
வணங்குகிறோம்.
    இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து

கலைக்குஆதாரமாகத்திகழும் கலைமகளை பாடி, ஆடி
பரவசமுடன் வணங்குவோருக்குகேட்டவரத்தை 
சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
  
    சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. 
சக்தி என்றால் பெண் என்ற பொருள் உண்டு. 
நவராத்திரிதினங்களில் வீடுகளில் கொலு வைத்து
கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு
தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. 
 

    கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 
நாட்களிலும் (நவ-ஒன்பது)சிறுமிகள் முதல்
வயது முதிர்ந்த பாட்டி வரைமாலை 6 மணி 
முதல் இரவு 9 மணி வரை பாட்டு, கோலாட்டம் 
உள்ளிட்ட தாங்கள் அறிந்து வைத்துள்ள
பாரம்பரிய கலைத்திறமைகளை புதுப்பித்துக்
கொள்வதுடன்மற்றவர்களுக்கும் கற்றுக் 
கொடுக்கிறார்கள்.கலைகளும் வளர்க்கப்படுகிறது. 

    கலைகளில் பிரதானமாக வாய்ப்பாட்டு, நடனம், 
புராணக் கதைகள்,சொற்பொழிவு போன்றவை 
இடம்பெறும். தவிர கொலு வைப்பதால்சிறுவர்
சிறுமிகள்உள்ளிட்டஇளைய சமுதாயத்தினர் 
மத்தியில் இயற்கையில்அமைந்துள்ள 
அழகுணர்ச்சியும் வெளிக்கொணர ஏதுவாகிறது. 
   பெண்களிடம் கொலு பொம்மைகள் 

அழகுப்படுத்தும் திறன் காரணமாகதன்னம்பிக்கை
ஏற்படுவதுடன் வயதானவர்களைமதிக்கும்
பண்பும் வளர்க்கப்படுகிறது. 
    கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் 

ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன 
புதியபொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான 
பொம்மைகளைசெய்து பிழைப்பு நடத்தும் கைவினைக்
கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது 
என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் 
கொலுவால்ஏற்படுகிறதுஎன்றால் மிகையில்லை.
    இந்திய தட்பவெப்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர்

மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த
காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து
தேவைப்படும். அந்த வகையில்நவராத்திரி நாட்களில்
விதவிதமான புரதச்சத்து நிறைந்தபயறு வகைகளை
உண்ணும் வகையில்முன்னோர் இந்த பண்டிகையை 
கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவரீதியிலும் 
நிறைவைத் தருகிறது. 
    ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு 

வகைகள்,பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக 
படைத்து, அவற்றைமற்றவர்களுக்கும்வழங்குவதை 
வழக்கமாகக்கொண்டுள்ளனர் பெண்கள். 
   புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய

நோய்க் காரணிகள்அதிகம்என்பதால் புரதச் சத்து
நிறைந்தபயறுகளை உண்பதற்கான 
ஒரு பண்டிகையாகவும் நவராத்திரிபண்டிகை 
திகழ்கிறது. கொலு வைத்துகொண்டாடும் இந்த
பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத்
தருகிறது எனலாம்.

    நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம்
உள்ளது. மனிதன்எவ்வகையிலேனும் தன்னை
உயர்த்திக் கொள்ளவேண்டும். ஆன்மரீதியாக மனிதன்
தம்மைபடிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் 
இறைவனில்கலக்க வேண்டும். இதுவே மனிதப் 
பிறப்பின்அடிப்படைதத்துவம். இதை விளக்கும்
பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள்
வைத்து அதில்பொம்மைகளை அடுக்கி 
வழிபடுகிறோம்.ஒன்பது படிகள்வைத்து ஒவ்வொரு
படியிலும் பின்வருமாறுபொம்மைகளைவைத்து 
வழிபட வேண்டும்.
 
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை 

உணர்த்தும்புல், செடி,கொடி போன்ற தாவர 
பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட

நத்தை,சங்கு போன்ற பொம்மைகள்
இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை

விளக்கும்கரையான், எறும்புபோன்ற பொம்மைகள
இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட

உயிர்களை விளக்கும்நண்டு, வண்டு பொம்மைகள்
இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால்

விலங்குகள்,பறவைகள், பொம்மைகள் இடம் 
பெற வேண்டும்.
 * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த
மனிதர்களின்பொம்மைகள் இடம் பெற வேண்டும்.



* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட

மகரிஷிகளின்பொம்மைகள்இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள்

இடம்பெறவேண்டும்.நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத
தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள்
என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் 

என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான
சரஸ்வதி, லட்சுமி, பார்வதிஆகியோருடன் இருக்க
வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக
இருக்க வேண்டும்.
 
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று 

கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற 
தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் 
பொம்மைகள் வைக்க வேண்டும்.

   ஓம் சக்தி ....ஆதி சக்தி ...பராசக்தி...ஓம்


Thanks NET